மீண்டும் நுழைகிறேன்

பல மாதங்கள் ஆகிவிட்டது ....... வலைப்பூவில் பதிவு செய்து... வலைப்பூ ஆரம்பிக்கும் போது ஏதோ ஒரு ஆர்வம் என்றாலும் ... பல முறை தயங்கியே ஆரம்பித்தேன் ....

அலுவலகம் மாறியது கூட ஒரு காரணம் ..புது அலுவலகத்தில் பல இணைய தளங்களுக்கு தீச்சுவர் தடை.. அதிலிருந்து நேரம் கிடைக்கும் போது என்னை வலைபூ உலகிற்கு இழுத்த வலைபூக்கள் - ப்ரியன்.. நிலவு நண்பன்.. விழியன் இனிய குழுமம் அன்புடன்.. இப்படி உலவுவதோடு சரி.. (அப்படி ஒன்னும் அதிக வேலைப்பளு இல்லை உண்மையைச் சொன்னால் என் சோம்பேறித்தனம்தான் காரணம்) .

இப்பொழுது வீடு மாறியாகி விட்டது ... வீட்டிலேயே இணைய இணைப்பு கொடுத்தாகிவிட்டது ... இனி கலர் கலராய் கலக்கலாம் (??) என்னும் நம்பிக்கையுடன் ... மீண்டும் நுழைகிறேன் ...

அன்புடன்
தனசேகர்...

0 comments: