அட சென்னையிலும் மழை !!!!

என் முதல் வலைப்பதிவை முடித்ததுவிட்டு .. அப்படியே வெளியே போய் டீ அடிக்கலாம் என போனால் . .. அட ... பலத்த காற்றுடன் நல்ல மழை !!!!

சென்னையை வாட்டிய வெய்யிலுக்கு இந்த மழை ஒரு பிரசாதம் . .

என்ன .. வருண பகவான் கூட என் பதிவை அதற்குள் படித்துவிட்டரா என்ன ????

அப்படியே மழையில் நனைய ஆசை இருந்தாலும் . . அலுவலகத்தில் இருக்கும் காரணதிற்க்காக . . ஓரமாய் நின்று மழைச்சாரலை . . சுவாசித்துவிட்டு வந்தேன் ... அடடா . .என்ன சுகம் !!!!!

என்றும் உங்கள்
தனசேகர்

கிராமத்துக் காற்று

அன்பு நண்பர்களுக்கு . . .
இதுவே என் முதல் தமிழ் வலைப்பதிவு ....
இயந்திர உலகில் இருக்கும் பலருக்கு கிராமத்திற்கு செல்வதே தனி சந்தோசம்தான். . . நானும் புத்தாண்டு விடுமுறைக்கு எங்கள் ஊர் வீரசோழபுரம் சென்று இருந்தேன் . . .
இரவு முழுவதும் கயிற்று கட்டிலில் சந்தோசமாக வானம் பார்த்து காற்று வாங்கிகொண்டு இருந்தேன் . . . அதுதான் சுததிந்தரக் காற்றோ ?

மேலும் ஒவ்வொரு முறையும் வீடு செல்லும்போது . . பேருந்தில் அமர்ந்து விடியற்காலையில் நெல் , கரும்பு தோட்டங்களின் நடுவே பயணிப்பதே தனி மகிழ்ச்சிதான். .. ..

இப்படி கடந்த முறை சென்றபொழுது ஒரு தோட்டம் பூராவும் . . சூரியகாந்தி மலர்கள் ஒரே மாதிரி சூரியனை பார்த்து மலர்ந்திருக்க ... அடடா . . . கையில் கேமரா இல்லமல் போயிற்று . .. . . .

கடந்த சனிக்கிழமை ஈரோட்டில் நல்ல மழை !!!! மழை விட்டவுடன் அந்தி மாலைப்பொழுதில் லேசான தூரல்களுடன் .. வயல்களி நடுவே. . பேருந்தில் பயணம் ...

மேலும் .. கறந்தவுடன் காய்ச்சி குடிக்கும் பசும்பால் .. அதிலிருந்து கட்டி தயிர் .. பார்த்தவுடன் தாவி குதூகலிக்கும் நாய் . . குறும்புதனமான கன்றுகுட்டி . . இன்னும் எத்தனை எத்தனை...

இந்த நினைவுகளோடு அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறேன் ..

என்றும் உங்கள்..
தனசேகர்.