அன்பு நண்பர்களுக்கு . . .
இதுவே என் முதல் தமிழ் வலைப்பதிவு ....
இயந்திர உலகில் இருக்கும் பலருக்கு கிராமத்திற்கு செல்வதே தனி சந்தோசம்தான். . . நானும் புத்தாண்டு விடுமுறைக்கு எங்கள் ஊர் வீரசோழபுரம் சென்று இருந்தேன் . . .
இரவு முழுவதும் கயிற்று கட்டிலில் சந்தோசமாக வானம் பார்த்து காற்று வாங்கிகொண்டு இருந்தேன் . . . அதுதான் சுததிந்தரக் காற்றோ ?
மேலும் ஒவ்வொரு முறையும் வீடு செல்லும்போது . . பேருந்தில் அமர்ந்து விடியற்காலையில் நெல் , கரும்பு தோட்டங்களின் நடுவே பயணிப்பதே தனி மகிழ்ச்சிதான். .. ..
இப்படி கடந்த முறை சென்றபொழுது ஒரு தோட்டம் பூராவும் . . சூரியகாந்தி மலர்கள் ஒரே மாதிரி சூரியனை பார்த்து மலர்ந்திருக்க ... அடடா . . . கையில் கேமரா இல்லமல் போயிற்று . .. . . .
கடந்த சனிக்கிழமை ஈரோட்டில் நல்ல மழை !!!! மழை விட்டவுடன் அந்தி மாலைப்பொழுதில் லேசான தூரல்களுடன் .. வயல்களி நடுவே. . பேருந்தில் பயணம் ...
மேலும் .. கறந்தவுடன் காய்ச்சி குடிக்கும் பசும்பால் .. அதிலிருந்து கட்டி தயிர் .. பார்த்தவுடன் தாவி குதூகலிக்கும் நாய் . . குறும்புதனமான கன்றுகுட்டி . . இன்னும் எத்தனை எத்தனை...
இந்த நினைவுகளோடு அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறேன் ..
என்றும் உங்கள்..
தனசேகர்.
திங்கள், ஏப்ரல் 17, 2006
கிராமத்துக் காற்று
Posted by
தனசேகர்
at
4/17/2006 மதியம் 03:33:00
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
pannai,
nijamaavE namma life'la niraya miss panramO'nu thOnrathu... iyarkaiyai vittu vegu thooram vanthu vittOm illaya... thinam thinam computer kooda pEsiyE vaazhkai mudinjidumO'nu bayamaa irukku... kiraamathil piranthathaal ennaal un uNarchigaLai purinthu kolla mudigirathu....kiraamathu anubangaL yethavathu ezhuthu da...!!!
--pondy Rajesh.
veerachola puram near by kangayam? please see my blog velarasi.blogspot.com
Post a Comment