விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை

ஈழத்தமிழருக்காக தன்னுயிரைத் துறந்த முத்துக்குமாருக்கு என் கண்ணீர் அஞ்சலி ..

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

உண்ணாவிரத அறப் போராட்டம்



இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி உண்ணாவிரத அறப் போராட்டம்

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை

நேரம்: காலை 08:00 - மாலை 06:00

இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல் அருகில். (கோயம்பேடு - அண்ணாநகர் மார்க்கம்)

OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.

இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நித்தம் இறக்கிறார்கள் அவர்கள்.

அடுத்த வேளை KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.

பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.

சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.

நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.
IT professionals and College students for Srilankan Tamils.

இலங்கை - சில உண்மைகள்

நமக்கு மிக அருகில் இருக்கும் இலங்கை பெயரளவில் ஒரு ஜனநாயக நாடு.

பெரும்பான்மையாக, சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடு. ""சிங்கள மொழிப் பேசும்

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களே இலங்கையில் அதிபர், பிரதமர் முதலான உயர் அரசுப் பதவி வகிக்க

முடியும்'' என்று இலங்கையின் அரசியல் சாசனத்தில் உள்ளது. இதுவே, இலங்கையின்

நேர்மையற்ற ஜனநாயகத்திற்கு ஓர் உதாரணம். மேலும் இலங்கையில் 1970லிருந்து இந்த நிமிடம்

வரை தமிழர்கள் மீது உரிமை மீறல்கள் நடந்து வருகிறது. உலகில் பல நாடுகளிலும் அகதிகளாக

வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களே இலங்கை ஒரு இன வேற்றுமைக் காட்டும்

நாடு என்பதற்கு சாட்சி.

1. குண்டு வீச்சிக்கு அஞ்சி, தற்போது தமிழ் மக்கள் 2 லட்சம் பேர் வண்ணிக் காட்டுப்

பகுதியில் அகதிகளாக புகுந்துள்ளார்கள். அவர்கள் இலங்கை அரசு திறந்து

வைத்திருக்கும் முகாம்களுக்கு செல்லவில்லை என்பது சிந்திக்க வேண்டிய உண்மை.

2. இலங்கை இராணுவம் கடந்த ஓராண்டில் 1000 கிலோ எடையுள்ள 6000 குண்டுகளை

தமிழர் வாழும் பகுதியில் போட்டுள்ளது.

3. இன்று 5 லட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் 70,000

மேற்பட்ட தமிழ் பேசும் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

4. இந்நிலையில், இலங்கையில் .நா. தொண்டு குழுவினர், உலகச் செஞ்சிலுவை

சங்கத்தினர், நார்வே தூதுக்குழு முதலிய அனைவரையும் இலங்கை அரசு

வலுகட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டது.

5. இந்தியா தன்னுடைய நட்பு நாடாக கருதும் இலங்கை அரசின் இராணுவத்தால் இது

வரை நூற்றுக்கணக்காண இந்திய மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

6. இந்திய அரசு இலங்கை அரசுக்கு ரேடார் வழங்குதல், இராணுவப் பயிற்சி மற்றும்

ஆலோசனை வழங்குதல் முதலிய பல்வேறு இராணுவ உதவிகளை செய்து வருகிறது.

ஈழத்தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட தமிழக மக்களின் எழுச்சி தொடரட்டும்!

இந்தியா இலங்கை அரசுக்கு தரும் இராணுவ உதவியை உடனே நிறுத்த வேண்டும்!

குண்டு வீச்சுக்கு அஞ்சி காட்டுக்குள் அகதிகளாக இருக்கும் 2 லட்சம் தமிழ் பேசும்

மனிதர்களின் உரிமை காத்திட உணர்வுகள் மக்கி போகாத இளைஞர்களின் கடமை என்ன ?


நன்றி: அனுப்பிய மயிலுக்கு !

இரவு நேரம்



தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் இரண்டாவது முயற்சி.

இந்த முறை என் புதிய நிக்கான் டி 40 யின் உதவியுடன் .. !! வாங்கிய அடுத்த நாளே நயாகரா அருவியின் இரவு அழகு ! கொஞ்சம் மெருகேற்றம் செயப்பட்டுள்ளது ! வழக்கம் போல் ஆட்டோ மோடில் வைத்து எடுத்துவிட்டேன்:)

தனிமை

தனிமை



தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் முதல் முயற்சி.
பிற்தயாரிப்பு அதிகம் செய்யத் தெரியவில்லை. எனவே வெறும் வெளிச்சம் மற்றும் வண்ணச் சரிபார்ப்போடு நிறுத்திகொண்டேன்:)

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!

நான் இல்லாமல் இந்த வருடமும் மாட்டுப் பொங்கல் :( சீக்கிரம் நான் வீட்டுக்கு வர ஆவலோடு காத்திருக்கிறேன். என் டைகர் நாய்க்குட்டி , ஆடு , மாடுகளும் தான் எனக்காக காத்திருக்கின்றன :)

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...

இனிப்புகளோடு இனிமையாகக் கொண்டாடுவோம் :)

தனசேகர்

நியுயார்க் நகரம் 3 : இந்தியர்கள் ஏன் இன்னும் இப்படி இருக்கிறோம் ??

இது நான் கேட்கும் கேள்வியல்ல .. என்னி(நம்மி)டம் ஒரு வெளிநாட்டுக்காரரால் கேட்கப்பட்ட கேள்வி. என்னால் தகுந்த பதில் அளிக்க முடியவில்லை, காரணம் அடவர் கேட்டதில் ஒரு உண்மை இருப்பதாகவே தோன்றியது. என்ன கேள்வி ?? நிகழ்வுகளை விரிவாக விவரிக்கிறேன்.

கடந்த வாரம் புதன்கிழமை மாலை ஒரு எட்டு மணி இருக்கும். அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்தது. நண்பர் ஒருவர் வெளியே சென்று தம் அடிக்க அழைக்க, நாங்கள் மூன்று பேரும் நியூ யார்க்கின் ராக்கஃபெல்லர் சென்டர் (எங்கள் அலுவலகம்) வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நங்கள் மூவருமே (இந்தியர்கள்) தமிழர்கள்.


எங்களை நோக்கி வந்த வெளிநாட்டு நபர் ஒருவர் வந்து எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். அப்படியே ஆங்கிலத்தில் கீழே.


He: hi guys .. I have a question for you . Which is the second largest economy of the world ?

we: Is it china ??

He: No. Its Japan. You know , some 20-30 years back when Americans fly to Japan for business talks, Japanese will record the talks inside the plan, interpreted them as soon as arrived to study about the visitor to be ready to face and get the business. But I have seen you all Indians are not socializing with any other nationalities. Why you are ??

We : really answer less :(

He: Its a globalized world. India with such a huge population and wealth, you guys have to socialize to improve the economy. I have asked the same question to a friend who is an Indian, He replied asking me back, do you ever seen a lion mingled with any other ?? :) Why he chosen lion and not any other animal ?

we: Because Lion is king of forest .. :)

He: Think of it guys, and I have one more question to be answered. Why Indian women are not straight ?

We: U mean ?

He: Why they always go with Indian men and not mingling with any other nationalities ?

We: Its a culture followed for years ..

He: No.. I have to find a real reason for it. Thank you guys .. good night .

இந்த கேள்வி மிகச் சாதரனமாகத் தோன்றினாலும், நாம் ஒவ்வொருவரும் யோசித்து விடை கண்டுபிடிக்க வேண்டிய கேள்வி !!

யாரவது தக்க காரணம் இருந்தால் அலசுங்கள் :)

நியுயார்க் நகரம் 2 : நயாகரா சுற்றுலா ,,,

நயகரா போயிட்டு வந்து ரொம்ப நாளு ஆயிடுச்சு .. ஆனா வழக்கம்போல சோம்பேறித்தனம் .. பதிவு எழுத ;)


இந்தப் பயணம் - கல்லூரி , சென்னையில் அலுவலக நண்பர்கள் என ஒரு சந்திப்பாகவே அமைந்தது. (இங்க வந்து ஒரு re-union . கொஞ்சம் ஓவர்தான் ;)


மொத்தமா கூட்டத்த சேத்திட்டு எத்தனை பேருணு பார்த்தா 12 பேர்!!! யப்பா சாமி வாடகைக்கு வேன் தான் எடுக்கனும்னு பார்த்தா ஓட்டறதுக்கு ஆளு இல்ல. எல்லாம் புது டிரைவர்கள். இந்த ஊருல டெஸ்ட் எழுதி, நம்ம ஊரு லைசன்ஸ் காமிச்ச உடனே ஒரு லைசன்ஸ் கொடுத்துட்டாங்க. ( அதை காமிச்சு மக்கள வெறுப்பேத்தியது தனி கதை ;) ) அதுனால நம்மள நம்பி வண்டி ஏற ஆளு இல்ல ;) .

சைனா பஸ் இங்கிருந்து போகுதுன்னு கேள்விப்பட்டு டிக்கட் பதிவு பண்ணிட்டோம். பயணம் நன்றாகவே இருந்தது ஆனால் 9 மணி நேரம் பயணம் செய்து 3 மணி நேரம்தான் நயாகராவைப் பார்க்க முடிந்த்தது.

சரி நான் இந்த பதிவு எழுதியதின் முக்கிய நோக்கம் நயாகராவைப்பற்றி எழுதுவது அல்ல, அந்தப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை எழுதவே. நான் இங்கு எதைப் பார்த்தாலும் நம் ஊரோடு தான் ஒப்பிடத் தோன்றுகிறது. அடிப்படையில் இங்கு உள்ள அனைத்தையும் அப்படியே நம் நாட்டில் எதிர் பார்ப்பதோ , ஒப்பிடுவதோ தவறு. இங்கு உள்ளதைப் பார்த்து நம் நாட்டில் எப்படி மாற்றலாம், மேம்படுத்தலாம் எனும் நோக்கத்தோடுதான் பார்ப்பதே சரி.

நயாகரா அருவி போல நம் நாட்டிலும் பெரிய அருவிகள் இருக்கிறது. கேரளாவிலுள்ள அதிரப்பள்ளி அருவி ஒரு எடுத்துக்காட்டு.. கீழே உள்ள படம அதிரப்பள்ளி .



ஒப்பிட்டு பார்க்க நயாகரா ..


இன்னும் எழுத ஆசை .. எழுதி முடிக்க வருசமாயிடும் ;) அதனால் இது பாதி(வு) ..

நானும் தமிழ்99 இ-கலப்பைக்கு மாறிவிட்டேன். ;) அடுத்த பதிவு முழுதும் தமிழ்99ல் ...

சிவாஜி - இவ்வளவு புகழுக்கு தகுதியுடையதா ?

அநேகமாய் பல புள்ளி விவரங்கள் .. சாதனைகளாக மாற்றப்பட்டாகிவிட்டது .. சிவாஜிக்கு. எல்லாம் மீடியா , இணையம் , நம் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் காரணம் இவை தான். படமும் typical ரஜினி படம் தான். இன்னும் நாம் எதிர்பார்ப்புகள் வைத்து ஏமாந்த்ததிற்குக் காரணம் சங்கர். அவரும் அவர் பங்குக்கு சுஜாதாவின் உதவியுடன் சி.பி.ஆர். , system software architecht, self destructive program என்பதை எல்லாம் தமிழ் உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். சொல்ல வரும் கருத்து எனப்பார்த்தால் கடைசியாய் வரும் money card. சங்கரின் பிரம்மாண்டத்திற்கு கண்ணாடி செட்டிங், ரஜினியின் மேக்கப். அந்த 250 கோடி என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறதோ இல்லையோ மென்பொருளாளர்கள் என்றால் வீட்டு வாடகை முதல் ஆட்டோக் கட்டணம் வரை இனி பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே மிக அதிகம்;(


1. முதலில் வியாபாரம். ஏ.வி.எம். நிறுவனத்தாருக்கு நன்றாகவே தூக்கம் வந்திருக்கும் என நினைக்கிறேன். வெளியீடு தள்ளிப்போன நாட்களைத்தவிர ;)


2. மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்த படம். அதற்கு காரணமே ரஜினி , சங்கர் என்ற பின் பலம்தான். அவர்களுக்காக படம் ஓடும் என்ற அசராத நம்பிக்கை!


3. உலக அளவில் அரங்கு நிறைவு காட்சிகள். இதற்கு முக்கியக் காரணம் நம் தமிழ் மக்கள் உலகம் முழுதும் பரவி இருப்பது, மீடியா , இணையம் போன்றவை. நானும் என் பங்குக்கு 1 வாரம் கழித்து(வெளியான முதல் சில தினங்கள் டிக்கட் கிடைக்கவில்லை) 1 மைல் தூரத்தில் இருக்கும் திரையரங்குக்குச் சென்று நன்றாக ரஜினியை நக்கலடித்துவிட்டு வந்தேன். நம்ம ஊரில் செய்தால் கட்டுகளோடுதான் வீடு திரும்பியிருக்க வேண்டும் :) .

இதனால் தமிழ் சினிமா உலக அளவில் புகழ் பெறத்துவங்கி விட்டதா ?? கதை , தரம் எனப்பார்க்கும்போது இல்லை என்பதே பதில். வியாபார நோக்கம் , புகழ் எனப் பார்க்கும்போது இன்னும் சில முன்னேற்றம் தேவை.

விளம்பரப்படுத்தி hype உருவாக்கி இருப்பது நல்ல வியாபார நோக்கம். பல நூறு திரையரங்குகளில் வெளியிட்டு சில தினங்களில் பணம் பண்ணியது சாதுர்யம்.

முக்கியமாக திரை அரங்குகளில் படத்தை ஆங்கிலத் துணைத்தலைப்புடன் (English Subtitle) வெளியிட்டிருந்தால் தமிழ் தெரியாதவரும் வந்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதுவே நான் பார்க்க வராததற்குக் காரனம் என என்னுடன் வேலை செய்யும் ஒரு வட இந்திய நண்பர் சொன்னார். ஆச்சரியமாகப் பார்த்தேன் ! பெரும்பாலான வட நாட்டினர் நம்மைக் கீழ்த்தரமாகவே எண்ணுகின்றனர். அது ஒரு தனிச் சண்டை. இணையத்தில இந்தி-தமிழ் , ரஜினி-அமிதாப் என ஒப்பிட்டு எதிர் விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கிறது.வெளிநாடுகளில் வெளியிடப்படும் இந்தித் திரைப்படங்கள் எல்லாம் ஆங்கிலத் துணை எழுத்துக்களோடுதான் வருகிறது. பாலிவுட் திரைப்படங்கள் ஐரோப்பவிலும் , பிற நாடுகளிலும் புகழடைவதற்கு இதுவும் ஒரு காரணம்.

துணைத்தலைப்பு இல்லாமை போன்ற சிற்சில குறைகளைத்தவிர சிவாஜி புகழையும் , இலாபத்தையும் ஈட்டிய ஒரு படம்.

இந்தக் குறைகளை நீக்கி , சிவாஜியின் விளம்பர , வியாபார யுக்தியைப் பயன்படுத்தினால் தசாவதாரம் நம் சினிமாவை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என நம்பலாம்.

ச்சும்மா கொஞ்சம் கடி !!!

வெள்ளிக்கிழமையும் அதுமா வீட்டுக்கு வந்து மெயில் பாக்ஸ் பாத்தா ஒரு மொக்கை கடி !! சரி .. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு காபி பேஸ்ட் பண்ணிடேன். சிரித்து மகிழுங்கள்!!

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .


- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?


- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .


பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!! என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் , ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் , லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!


டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் . ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் . இதுதான் உலகம். பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் . ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் . சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ?? யோசிக்கனும்...!!


தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் . ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா? தத்துவம்

2: ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் , மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம்


3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் , ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும் , ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ !!!!) தத்துவம்

5: பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் , ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)


தத்துவம் 6: லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ... சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் , கழித்தல் கணக்கு போடும்போது , கடன் வாங்கித்தான் ஆகனும். கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா ?



பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது . இதுதான் உலகம்


T Nagar போனா டீ வாங்கலாம் . ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .


இளநீர்லயும் தண்ணி இருக்கு , பூமிலயும் தண்ணி இருக்கு . அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .


உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் , ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .


ஓடுற எலி வாலை புடிச்சா நீ ' கிங்'கு ஆனா... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .


வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ? இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.


சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா , ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறதுபிளானிங்கா ?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் , Rewindலாம் பண்ண முடியாது .

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்? "Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்.

மத்திய பூங்காவிற்கு ஒரு மதிய நடை

நானும் நியுயார்க் வந்து மாசம் நான்கு ஆகி விட்டது. ஊரில் யார்கிட்ட பேசினாலும் கேக்கும் முதல் கேள்வி - எங்க எல்லாம் சுத்தி பார்த்த ??

நான் இன்னும் இந்த டாலருக்கு 42 ரூபா (அப்ப 44 .. இப்ப கொறஞ்சு போச்சு ;-( ) கணக்கு போடறதயே இன்னும் மறக்க முடியல. இங்க எங்க போனாலும் காசு கேக்கிறாங்க!!. அப்புறம் எங்க போறது ??

நியுயார்க்னா உடன் நினைவிற்கு வரும் times square தான் தினமும் செல்லும் வழி ;-) அந்த ஒரு சந்தோசத்திலேயே நாலு மாசம் ஓடிடுச்சு.

நேத்து மதியம் வழக்கம்போல சாப்பிட்டுட்டு அரை மயக்கத்துல உட்காந்துட்டு இருந்தேன். பக்கத்துல இருந்தவர் வா ஒரு நடை போய்ட்டு வரலாம்னு கூப்பிட்டார். உடனே கிளம்பி ரோடுக்கு வந்தா எங்க பார்த்தாலும் மக்கள் கூட்டம். நம்ம தி. நகர் ரங்கநாதன் தெரு மாதிரி!!. அப்படியே நடந்து ஒரு எட்டு தெரு தாண்டினா மத்திய பூங்கா!!(Central Park - Manhattan).

இதோ அங்கு பிடித்த படங்கள்... கொஞ்சம் துலிப் மலர்களுடன் (அதாங்க அந்நியன் படத்தில் வருமே அந்த மலர் மட்டும்- இடம் அல்ல)











மிருக காட்சி சாலை நுழைவு வாயில்

அடுத்து இந்த மாசக்கடைசியில தான் நயாகரா போக திட்டம் ;-) பார்த்து விட்டு கதை சொல்கிறேன் ;-)

ஜனாதிபதி விருது பெறும் வீரசோழபுரம்

அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!!

நமது (எங்கள் எனச்சொல்ல வரவில்லை;) ) கிராமம் வீரசோழபுரம் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு கிராமமாக ஜனாதிபதி விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது !!!

மத்திய அரசில் இருந்து அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து இந்த விருதுக்கு தேர்வு செய்து உள்ளார்கள்.

இதில் நான் சந்தோசப்பட மேலும் ஒரு முக்கியக் காரணம் 35 வருடங்களுக்கும் மேலாக பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வரும் திரு.பாலசுப்பிரமணியம் & திருமதி. வள்ளியாத்தாள் - என் தந்தையும் தாயும். 1968 முதல் என் தந்தை. 1996 - 2006 வரை என் தாய் (அப்பொழுது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது). மீண்டும் தற்பொழுது என் தந்தை.

இது கிராம மக்களுக்கு கிடைத்த வெற்றி !!! இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதில் மிக்வும் பெருமைப்படுகிறேன்.

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

நம்ம அன்புடனின் ஆண்டு விழவுக்காக போட்டிகள் தயார்... எல்லாரும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம் ... ;) விவரங்கள் விழாத்தலைவர் விக்கியின் மொழியில் இதோ...

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-


எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி

படம் : 01



படம் : 02



படம் : 03



படம் : 04




படம் : 05



படம் : 06



படம் : 07



படம் : 08



படம் : 09



படம் : 10

அன்புடன் ஆண்டு விழா!

எனக்கு முதன்முதலில் யுனிகோடு தமிழின் சிறப்பை கற்றுக்கொடுத்த அன்புடன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

அனைவரும் ஒரு குடும்பமாக .. பல கலந்துரையாடல்கள் .. கட்டுரைகள்.. கவிதைகள்... என தகவல் சுரங்கம் அன்புடன்.

நம்ம தலை விக்கி தான் இந்த விழாத்தலைவர் ;)

( தலைவரல்லவா , ,அதான் அந்த சிறப்பு பட்டம் 'தலை' )

வாருங்கள் அன்புடன் விழாவில் கலந்துகொள்வோம் ;)

எப்படி இருந்த நான் ....

ஏதோ திருவாண்மியூர்ல கூட்டதோட கூட்டமா பசங்களோட சுத்திட்டு இருந்தேன் ...

காலைல மிர்ச்சி சுச்சி பேசி முடிச்சிட்டு போற நேரத்தில எழுந்து 11 மணி வரைக்கும் ரேடியோ கேட்டுட்டு கெளம்ப ஆரம்பிப்பேன். பொறுமையா கெளம்பி ஷேர் ஆட்டோ ... M5 .. .21H .. இப்படி எதாவது புடிச்சு சீட் கிடச்சாலும் இல்லனாலும் நம்ம காதுல FM ஐ மாட்டிகிட்டு கேட்டுகிட்டே அலுவலகத்திற்கு போவேன்...

அப்படியே காலத்தை ஒட்டிட்டு இருந்த என்னை திடீர்னு நம்ம தலைவர் அதாங்க PL கூப்பிட்டு... தம்பி ஒரு ஆன்சைட் வாய்ப்பு இருக்கு, இண்டர்வியூக்கு படின்னு சொன்னாரு.

அட இன்னும் இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கேன்னு மனச தேத்த்திகிட்டு களத்துல எறங்கிட்டேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி காபி பேஸ்ட் செஞ்சு கொடுத்து வச்ச விசா அப்ளிகேசனையும் மதிச்சு நமக்குனு அடுத்த வருசத்துல ஒரு தேதியையும் கொடுத்திருந்தாங்க.. அத தூசி தட்டி தேதிய மாத்தியும் கொடுத்துடாங்க.

விசா இண்டர்வியூவுக்கு போற அன்னிக்கு இன்னொரு கூத்து நடந்தது... சனிக்கிழமை காலைல 9.30 ம்ணிக்கு. நம்மதான் சனிக்கிழமைனா 12 மணி வரைக்கும் தூங்குவோமே!!! அலாரம் வெச்சுட்டு தூங்கினா அலாரம் அடிச்சதே தெரியல...

ஏதொ நம்மள பத்தி வீட்டுக்கு தெரிஞ்சிருந்த்தால போன் போட்டு எழுப்பி விட்டாங்க. எழுந்து பாத்தா மணி 8.30!. என்ன நேரம் ஆயிடுச்சேனு பதட்டப்பட்டாங்க. நம்ம அத காமிக்காம, 'ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்ப கெளம்புனா சரியா இருக்கும்' னு சமாளிச்சிட்டு அவசர அவசரமா வழக்கம்போல கெளம்பி ஆட்டோக்கு நூறு ரூபா கொடுத்து போய் ஜெமினி பாலத்துல (இங்கதான் தூதரகம் இருக்கு. எனக்கும் அன்னிக்குதான் தெரியும் ;) ) எறங்கிப் பார்த்தா மணி 9.15! அப்பதான் கவனிச்சேன் .. அடையாள அட்டைய மற்ந்துட்டேன். அலுவலகத்துல வேற அடையாள அட்டைய எடுத்துட்டு போ.. இல்லேன்னா அங்க கேள்வியா கேட்டு தொலைபாங்க. பிரச்சனை ஆயிப்போயிடும்னு சொல்லி வெச்சுட்டாங்க.

உடனே ரூமுக்கு போன் பண்ணி பசங்களை எழுப்பி உடனே ஐ.டி. கார்டு எடுத்துட்டு வாடா மச்சினு சொன்னேன். அவனும் முகம் கூட கழுவாம அப்படியே அவசரமா வந்து வரிசைல நின்ன எனக்கு கொடுத்து அனுப்பி வெச்சான்.

விசா இண்டர்வியூவையும் சொல்லிக்கொடுத்த மாதிரி ஒப்பிச்சு முடிச்சிட்டு வந்தேன். அப்படியே client interivewவையும் ஒரு வழியா முடிச்சேன்.

திடீர்னு, 'தம்பி அடுத்த வாரம் டிசம்பர் 31ந்தேதி கெளம்பனும் தயார் ஆகு' ன்னு தலைவர் சொல்லிட்டார். அப்படியே அங்க இங்க எல்லா மக்களுக்கும் அண்ணன் அடுத்த வாரம் நியூ யார்க் போறேன்னு விளம்பரத்த கொடுத்துட்டு தயார் ஆனேன்.

நிறைய வாங்க வேணுமே .. நம்மகிட்ட வண்டியும் இல்ல. சரி அதான் நம்ம பசங்க இருக்காங்களே. கம்பனிக்காக உழைச்சுகிட்டு இருந்த பசங்களைக் கூப்பிட்டேன். டே வேலை இருக்குடான்னு சொன்னவங்கள முதல்ல கூப்பிட்டுகிட்டு (வேலை செய்யிறவனைத்தான் நம்ம விட மாட்டோமே!) அங்க இங்க போய் எல்லாத்தயும் வாங்கி கொண்டு வந்து சேர்த்துட்ட்டோம். சரியா சொல்லனும்னா சேர்த்துட்டாங்க :).

அதுக்கும் மேல எல்லம் வாங்கியாச்சானு ஒரு லிஸ்ட் போட்டு சரி பார்த்து அத பெட்டியில பேக் பண்ணி எந்தப் பொருள் எங்க இருக்குதுனு ஒரு பட்டியலும் போட்டு ரெடி பண்ணிட்டாங்க.

ஏதோ தனியா போகனுமேன்னு யோசிசிட்டு இருந்தப்ப நல்ல வேலையா டீம்ல இன்னொருத்தரும் வந்தார். ரெண்டு வாரம் முன்னாடி ஒருத்தர் கெளம்புனார். அவர வீடு எல்லம் பாக்க சொல்லிட்டோம்.

நான் கெளம்பறதுக்கு ஒரு கூட்டமே வேலை பார்த்தது... எப்படியோ புது வருசத்துல இருந்து உன் தொல்லை ஒழிஞ்சதுடான்னு எல்லாரும் வந்து எமிரேட்ல ஏத்தி விட்டுட்டாங்க ;)

இதை மீண்டும் தொடர்கிறேன் .... இனி நியுயார்க் நகரமாக .....;)

சில்லுனு ஒரு மழைக்காலம் ...

எல்லாரும் இந்த 'சில்லுனு' அப்படினு ஒரு தலைப்பை பயன்படுத்துறாங்க .. சரி நானும் அதே தலைப்புல ஒரு பதிவு செய்றேன் ... நான்
தீபாவளிக்கு 6 நாள் விடுமுறை எடுத்து சந்தோசமாய் எடுத்த படங்களை பகிர்ந்துகொள்ளவே ... இந்த பதிவு .... மழை வந்தால் சென்னை மக்கள்
படும் அவதியிலிருந்து சற்று இளைப்பாற ... நம்ம ஊருக்கு போவோம் வாருங்கள்.....




மழை வர்ற மாதிரி வானம் கறுக்கும் பாருங்க... அப்படியே ஒரு இருட்டு .... திடீர்னு மணி 6 ஆன மதிரி .....

சரி மழை விட்ட உடனே .... சில நேரம் வெயிலும் லேசான தூரலும் சேர்ந்த்து வரும் .. அப்பத்தான் நரிக்கும் காக்காய்க்கும் கல்யாணம்னு
சொல்லுவாங்க...... சில சமயம் வெயில் அடிக்கும் .... அந்த வெயிலின் மஞ்சள் நிறம் ..... இதோ ....


அந்த மழை விட்டவுடனே ... செடியிலெல்லாம் அந்த மழைத்துளி இருக்கும் பாருங்க .. பாத்துகிட்டே இருக்கலாம் ....




இந்த மழை எல்லாம் நின்ன உடனே ... ஒரு கணக்கு போடுவோம் ... ஒரு ஒழவு (உழவு) மழை இருக்கும் .... இல்ல குட்டைல நல்லா தண்ணி
நிக்குது ... கொஞ்சம் அதிகமாவே இருக்கும் ... அதுக்கும் மேல ஒரு கணக்கு உண்டு... உரல்ல தண்ணி நம்பி நிறைய இருந்தா ... ஒரு ஒழவு மழை... நல்ல ஈரம் மண்ணுல இருந்தா டிராக்டருக்கு சொல்லி விதைக்கனும் ... .விதைப்பயிர் இல்லனா போய் வாங்கனும் ... விதைக்கலனாலும்
சும்மாவது உழவு ஓட்டி விடனும் .. இல்லனா களை அதிகம் ஆயிடும் .... சின்ன வயசுல அந்த டிராக்டர்ல சைடுல உகாந்துட்டு ஓட்டறதுனாலே
தனி பிரியம் ....

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போலாகுமா ???....