Showing posts with label வீரசோழபுரம். Show all posts
Showing posts with label வீரசோழபுரம். Show all posts

ஜனாதிபதி விருது பெறும் வீரசோழபுரம்

அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!!

நமது (எங்கள் எனச்சொல்ல வரவில்லை;) ) கிராமம் வீரசோழபுரம் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு கிராமமாக ஜனாதிபதி விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது !!!

மத்திய அரசில் இருந்து அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து இந்த விருதுக்கு தேர்வு செய்து உள்ளார்கள்.

இதில் நான் சந்தோசப்பட மேலும் ஒரு முக்கியக் காரணம் 35 வருடங்களுக்கும் மேலாக பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வரும் திரு.பாலசுப்பிரமணியம் & திருமதி. வள்ளியாத்தாள் - என் தந்தையும் தாயும். 1968 முதல் என் தந்தை. 1996 - 2006 வரை என் தாய் (அப்பொழுது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது). மீண்டும் தற்பொழுது என் தந்தை.

இது கிராம மக்களுக்கு கிடைத்த வெற்றி !!! இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதில் மிக்வும் பெருமைப்படுகிறேன்.