Showing posts with label சில்லுனு ஒரு மழைக்காலம். Show all posts
Showing posts with label சில்லுனு ஒரு மழைக்காலம். Show all posts

சில்லுனு ஒரு மழைக்காலம் ...

எல்லாரும் இந்த 'சில்லுனு' அப்படினு ஒரு தலைப்பை பயன்படுத்துறாங்க .. சரி நானும் அதே தலைப்புல ஒரு பதிவு செய்றேன் ... நான்
தீபாவளிக்கு 6 நாள் விடுமுறை எடுத்து சந்தோசமாய் எடுத்த படங்களை பகிர்ந்துகொள்ளவே ... இந்த பதிவு .... மழை வந்தால் சென்னை மக்கள்
படும் அவதியிலிருந்து சற்று இளைப்பாற ... நம்ம ஊருக்கு போவோம் வாருங்கள்.....




மழை வர்ற மாதிரி வானம் கறுக்கும் பாருங்க... அப்படியே ஒரு இருட்டு .... திடீர்னு மணி 6 ஆன மதிரி .....

சரி மழை விட்ட உடனே .... சில நேரம் வெயிலும் லேசான தூரலும் சேர்ந்த்து வரும் .. அப்பத்தான் நரிக்கும் காக்காய்க்கும் கல்யாணம்னு
சொல்லுவாங்க...... சில சமயம் வெயில் அடிக்கும் .... அந்த வெயிலின் மஞ்சள் நிறம் ..... இதோ ....


அந்த மழை விட்டவுடனே ... செடியிலெல்லாம் அந்த மழைத்துளி இருக்கும் பாருங்க .. பாத்துகிட்டே இருக்கலாம் ....




இந்த மழை எல்லாம் நின்ன உடனே ... ஒரு கணக்கு போடுவோம் ... ஒரு ஒழவு (உழவு) மழை இருக்கும் .... இல்ல குட்டைல நல்லா தண்ணி
நிக்குது ... கொஞ்சம் அதிகமாவே இருக்கும் ... அதுக்கும் மேல ஒரு கணக்கு உண்டு... உரல்ல தண்ணி நம்பி நிறைய இருந்தா ... ஒரு ஒழவு மழை... நல்ல ஈரம் மண்ணுல இருந்தா டிராக்டருக்கு சொல்லி விதைக்கனும் ... .விதைப்பயிர் இல்லனா போய் வாங்கனும் ... விதைக்கலனாலும்
சும்மாவது உழவு ஓட்டி விடனும் .. இல்லனா களை அதிகம் ஆயிடும் .... சின்ன வயசுல அந்த டிராக்டர்ல சைடுல உகாந்துட்டு ஓட்டறதுனாலே
தனி பிரியம் ....

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போலாகுமா ???....